பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்கக் கோவை…

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவை தயாரிக்கப்படவுள்ளதாக சர்வமதத் தலைவர்களுடன் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று(05) இடம்பெற்ற கலந்துரையாடலில் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் இதற்கு ஆதரவு அளித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இதன்போது சுட்டிக்காட்டியதோடு, விரைவில் இதனை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
(rizmira)