அரச நில அளவையாளர் சங்கம் பணிப்புறக்கணிப்பில்..

அரச நில அளவையாளர் சங்கம், ஆறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று(11) மற்றும் நாளை(12) சுகயீன விடுமுறையில் பணிக்கு வராமல் இருக்க தீர்மானித்துள்ளது.

நேற்று(10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய குறித்த சங்கத்தின் தலைவர் துமிந்த உடுகொட, இதனைத் தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தாவிடின் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல், தொடர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)