சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக தென் ஆப்பிரிக்கா வீரருக்கு 8 ஆண்டுகள் விளையாட தடை விதித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
33 வயதான தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான லொன்வாபோ சோட்சோபே (Lonwabo Tsotsobe) இற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உள்ளூர் T20 போட்டியில் லொன்வாபோ சோட்சோபே சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
முதலில் குற்றச்சாட்டை மறுத்த லொன்வாபோ சோட்சோபே பின்னர் அதை ஒப்புக் கொண்டார்.
விசாணையின் முடிவில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக சோட்சோபேக்கு 8 ஆண்டு விளையாட தடை விதித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.