அரசாங்கம் ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தின் காலத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாமை, அரசின் பிரதான அமைச்சர்கள் சிலருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெறுவதால் என கோப் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பு நேற்று(12) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.