திறைசேரி முறி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அலோசியசின் இலத்திரனியல் தொடர்பாடல் சாதனங்களை கையளிக்கும்படி பணிப்பு

திறைசேரி முறி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் இன்று (24) சமர்பிக்கப்பட்ட சாட்சிகளின் பிரகாரம் விசாரணைகள் முடிவடையும் வரை கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் அவர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசி மற்றும் மடிக்கணிணி உள்ளிட்ட இலத்திரனியல் தொடர்பாடல் உபகரணங்களை ஒப்படைக்குமாறு முறி ஆணைக்குழு பணித்துள்ளது.
அதன் பிரகாரம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் அவற்றை கையளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.