நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் புதிய வரி இலக்கம் அறிமுகம்

நிதி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது நிதி அமைச்சர் மங்கள சமரவீர நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வரி இலக்கம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார். நாடு என்ற ரீதியில் இலங்கை முன்னோக்கி நகரும் போது வரி செலுத்த வேண்டிய அனைவரும் வரி செலுத்த வேண்டியது முக்கிய கடமையாகும் எனவும், வரியின் அடிப்படையை உயர்த்துவதற்கு இவ்வாறு வரி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்வது அவசியமானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.