உயர்தர மற்றும் ஐந்தாம் தர பரீட்சைகளை நடாத்த பரீட்சைத் திணைக்களம் தயார் நிலையில்

மூன்று இலட்சத்து 15 ஆயிரத்து 227 மாணவர்கள் தோற்றும் உயர்தர பரீட்சை எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அத்துடன் மூன்று இலட்சத்து 56 ஆயிரத்து 778 பரீட்சார்த்திகள் தோற்றும்5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இந்த மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இப்பரீட்சைகளை நடாத்த பரீட்சைத் திணைக்களம்  தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
அதேவேளை இரண்டு பரீட்சைகளுக்கு முன்னரும் பாடசாலை சூழலை சுத்தப்படுத்துமாறு சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு அதிபர்களுக்கும் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.