உமாஓய திட்டம் முன்னைய அரசின் காலத்தில் முறையான எதுவித ஆய்வுகளும் இன்றி ஆரம்பிக்கப்பட்டதால், அது பாரிய நில வெடிப்புகளையும், கட்டிட வெடிப்புகளையும் ஏற்படுத்தி மக்களுக்கு இன்னலைக்கொடுத்தது.
இதனால் உமாஓய திட்டத்துக்கு பாரிய எதிர்ப்புகள் கிளம்பின. மக்கள் போராட்டங்களை முன்னெடுத்ததுடன் , எதிர்க்கட்சியினரும் அரசியல் ரீதியிலான எதிர்ப்புகளை வெளியிட்டுவந்தனர்.
இதையடுத்து, உமா ஓய திட்டத்தின் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டு, நோர்வேயின் விசேட நிபுணர்களைக் கொண்டு ஆய்வு நடத்த தீர்மானிக்கப்பட்டது .
இந்த நிலையில், இலங்கை வந்துள்ள நோர்வே விசேட நிபுணர்கள் வழங்கும் அறிக்கையின் அடிப்படையில், உமா ஓய திட்டத்தை தொடர்வதா? அல்லது இடைநிறுத்துவதா? என்று தீர்மானிக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.
உமாஓயா குறித்த மேற்பார்வை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தபோது மஹிந்த அமரவீர இதனைக் கூறியுள்ளார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி நாட்டில் 178 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…
நாட்டிலிருந்து 1100 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்கு திசை வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் நிலவும் தாழமுக்க நிலை எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் வலுவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீன நிறுவனத்தின் சேதனப் பசளையை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமொன்றுக்கு அனுப்பி மீள ஆய்விற்கு உட்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளதாக விவசாய…