உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்தை திருத்தியமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க நிதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகளை நிறைவேற்றுதற்கு மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்திருந்த, நிலையில் குறித்த சட்டமூலத்தை அரசியல் யாப்புடன் ஒத்திசையும் வகையில் மாற்றி அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
(rizmira)