இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவன (ICTA) பிரதான நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான முகுந்தன் கனகே தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அவரது இராஜினாமாக் கடிதத்தினை கடந்த 11ம் திகதி நிறுவனத்தின் உயர் முகாமைத்துவரிடம் கையளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமையவே அவர் பதவி விலகியதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
(rizmira)