முதலில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்- அமைச்சர் ராஜித..

புதிய அரசியல் சாசனம் அமைப்பது தொடர்பில் முதலில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

உத்தேச அரசியல் சாசனம் அமைக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் மக்களின் கருத்தை அறிந்து கொள்ளும் நோக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நபரைச் சுற்றி காணப்படும் அதிகாரங்களை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளிக்கும் வகையில் புதிய அரசியல் சாசனம் அமைக்கப்படும் எனவும், ஏனைய தேர்தல்களுக்கு முன்னதாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)