நாட்டில் நிலவுகின்ற அதிக மழை காரணமாக குகுலே கங்கையின் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குகுலே கங்கைக்கு அருகில் தாழ்நிலப் பகுயில் வசிக்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
மேலும், புளத்சிங்கள மற்றும் களுத்துறை பிரதேசங்களிலுள்ள மக்களும் அவதானமாக இருக்குமாறும்; இரத்தினபுரி, நுவரெலிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய அச்சுறுத்தல் இருப்பதால் அப்பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் மேலும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
(rizmira)