எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாக தகுதி பெற இலங்கை அணிக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாளை(20) இடம்பெறவுள்ளது. இதேவேளை இலங்கை அணி எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக்கிண்ணத் தொடருக்கு நேரடியாக தகுதி பெற வேண்டுமாயின் இந்திய அணிக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டிகள் இரண்டில் வெற்றி பெற்றாக வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை(20) பகலிரவுப் போட்டியாக தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
(rizmira)