தற்போதைய அரசாங்கத்தை 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்தும் நடத்திச்செல்ல ஜனாதிபதியுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கிரிந்திவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
“..அரசாங்கம் மாற்றப்பட வேண்டும் என கூறுகின்றனர். அரசாங்கம் மாற்றப்பட்டால், இலங்கை சர்வதேச அரங்கில் மீண்டும் பின்னடைவுக்கு முகம் கொடுக்கும். நாட்டின் அபிவிருத்தியில் பின்னடைவு ஏற்படும்..” என தெரிவித்தார்.
(rizmira)