வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தலைமையில் நேற்று(21) ஜனாதிபதி செயலகத்தில். விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது
இக்கலந்துரையாடலின் போதே வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் அங்கு அவதானம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.