இலங்கை மத்திய வங்கியின் புதிய பிரதி ஆளுநராக சீ.ஜே.சீ.சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் அனுமதியுடன் நிதி சபையின் மூலம் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சீ.ஜே.சீ. சிறிவர்தன இதற்கு முன்னர் மத்திய வங்கியின் உதவி ஆளுநராக செயற்பட்டதுடன் மத்திய வங்கியில் 30 வருடங்களுக்கும் அதிக காலம் சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.