பிரிகேடியர் மீண்டும் விளக்கமறியலில்…

ரத்துபஸ்வல சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்தன உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பிரதான நீதவான் டீ.ஏ ருவன் பத்திரன இன்று(23) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கம்பஹா ரத்துபஸ்வல பிரதேசத்தில் சுத்தமான குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இராணுவ குழுவிற்கு பொறுப்பாயிருந்தமை தொடர்பில் பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்தன உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2013 ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)