நாட்டின் பல பாகங்களில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.