அரசியல் அமைப்பின் 20ம் திருத்தத்திற்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றினை, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்), அமைப்பினால் நேற்று(28) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கான, விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அதனை, அரசமைப்பின் 20ஆவது திருத்தமாக நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்திருந்தது. அதனைச் சவாலுக்கு உட்படுத்தியே குறித்த இந்த மனு, தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
(rizmira)