தமிழர்களது நிம்மதிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.. – மஹிந்தவுக்கு ஆதரவாக சம்பந்தன்..

தமிழர்களுக்கு தேவையான அரசியல் தீர்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலேயே வழங்க முடியும் என, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்ற போதே சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார்.

“..விடுதலை புலிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றியமையினால் இன்று திருகோணமலைக்கு சுதந்திரமாக சென்று வர முடிகிறது.

அதற்கு காரணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. இன்று வரையில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்க தங்களினாலேயே தீர்வு ஒன்று வழங்க முடியும். இதனால் புதிய அரசியலமைப்பில் தலையிட்டு உதவுமாறு தான் கோரிக்கை விடுக்கிறேன்..” என சம்பந்தன் மஹிந்தவிடம் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)