இருபதாவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஒரு வருட காலத்தினுள் மாகாண சபை தேர்தலை நடத்தவுள்ளதாக சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு இன்று(06) அறிவித்துள்ளார்.
இருபதாவது சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, நீதியரசர் பிரியசத் டெப் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதி குழுவின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
(rizmira)