குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இவர் இதற்கு முன்னரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பணியாற்றியவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் கொலை, மொஹமட் சியாம் கொலை என்பவற்றின் விசாரணைகள் ஷானி அபேசேகரவின் தலைமையிலேயே இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)