பாராளுமன்ற உறுப்பினர்களது அனைத்து வெளிநாட்டுப் பயணங்களும் இரத்து

ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களது அனைத்து வெளிநாட்டுப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று(12) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து மேற்குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

20ம் திருத்தச் சட்டம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையில், அதற்கான வாக்கெடுப்பு நிறைவடையும் வரையில் ஆளுந்ததரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஜனாதிபதியும், பிரதமரும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)