பிணை முறி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தீர்வின்றி நிறைவடைய வாய்ப்புள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
புத்தளம் – ஆணைமடு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்
இதுகுறித்து தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
எவ்வறாயினும், குழு மற்றும் ஆணைக்குழுக்களை நியமித்து இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதன்போது சிற் சில விடயங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
எனினும் அவை சில வேளைகளில் நீதிமன்றத்தில் நிரூபிக்க வாய்ப்பு இல்லாது போகலாம் எனவும் பாலித்த ரங்கே பண்டார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
(rizmira)