“.. என்னை ஆண் விபச்சாரி என விமர்சிக்கின்றனர்..” – ரஞ்சா..

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் தற்போது பலவிதமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து தெளிவூட்டுகையில் பிரதியமைச்சர் கூறுகையில்;

“.. என்னில் குற்றங் கூறும் சிலர் என்னை விமர்சிக்கையில் ஆண் விபச்சாரி எனக் கூட வாய் கூசாது விமர்சிக்கின்றனர். குறித்த வார்த்தைகளை இறைமை மிகுந்த துறவிகளால் ஒருபோதும் கூற முடியாது. அவர்கள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் பேசும் வஞ்சகர்கள். அவர்களை முதலாளிகள் என்றே கூற வேண்டும். அவர்கள் பணம் தொடர்பில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுபவர்கள். அவ்வாறானவர்கள் அணியும் ஆடைகள் சீல் உடையா இல்லை வேட்டியா என வித்தியாசம் தேவையில்லை…” என கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து தெரிவித்திருந்தார்.

 

(riz_mira)