நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலை குறித்து சுகாதார அமைச்சின் அனுமதியுடன் புதிய வங்கிக் கணக்கொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சினால் அதற்கு வழங்கப்படும் நிதி குறித்த கணக்கில் வைப்பு செய்யப்படும் எனவும் சுகாதார சேவை அத்தியட்சகர் ஜெனரால் வைத்தியர் ஜெயசுந்தர பண்டார விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
குறித்த வைத்தியசாலையானது, நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலை எனும் பெயரில் நடாத்தி செல்வதானது, வைத்தியர் நெவில் பெர்னாண்டோ அவர்களால் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டதொன்று ஆகும். எனவே அதற்காகவே நிதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில், சில அரசியல்வாதிகள் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் வங்கிக் கணக்கு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையிலேயே குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
(rizmira)