காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிற்கு இரட்டை பிரஜாவுரிமை இருப்பதன் காரணமாக அவருக்கு பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த வழக்கை விசாரிப்பதற்கு ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நீதியரசர் பிரியஸாத் டேப் மூலம் நியமிக்கப்பட்டுள்ள குறித்த குழுவில் சிசிர டி ஆப்ரூ, அணில் குணரத்ன, புவனேக அலுவிகாரே, பிரியண்ண ஜயவர்தன மற்றும் நளின் பெரேரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
(rizmira)