வில்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வஸ்கமுவ தேசிய வனத்தில் பணியாற்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளுடைய அறையில் இருந்து சில ஆயுதங்கள் நேற்று(21) இரவு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறையின் கதவு உடைக்கப்பட்டு இந்த ஆயுதங்கள் திருடப்பட்டுள்ளதாகவும், அதில் T-56 ரக துப்பாக்கி உட்பட வேறு 4 ஆயுதங்களும் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்கள் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
(rizmira)