கல்கமுவ நகரிலுள்ள வியாபார நிறுவனமொன்று முற்றாக எரிந்து சேதம்..

கேகாலை, கல்கமுவ நகரிலுள்ள வியாபார நிறுவனமொன்று இன்று (24) அதிகாலை தீப்பிடித்துக் கொண்டதில் அந்நிறுவனம் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக காவற்துறை தெர்வித்துள்ளது.

மூன்று தீயணைப்புப் பிரிவு வாகனங்களை ஈடுபடுத்தி குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதுவரை தீ’க்கான காரணம் இனங்காணப்படாதுள்ளதாகவும் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கேகாலைப் பொலிஸ் பிரிவு மேலும் அறிவித்துள்ளது

 

(rizmira)