இன்றும் இடியுடன் கூடிய மழை…

இன்றும்(26) சில மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் , சப்ரகமுவ , மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை , வடக்கு , வடமத்திய , மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.