பொலிஸ் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் தொடக்கம் பொலிஸ் மா அதிபர் வரை ஒரே மாதிரியான சீருடையை அறிமுகப்படுத்த அமைச்சர் சாகல ரத்நாயக்க தீர்மானித்துள்ளார்.
தற்போதைக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் என்றவாறாக மூன்று வகையான பொலிஸ் சீருடைகள் வழக்கத்தில் உள்ளன.
இதற்குப் பதிலாக ஒரே வர்ணம் மற்றும் ஒரே தரத்திலான சீருடையை அனைத்துப் பொலிசாருக்கும் வழங்குவதற்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தீர்மானித்துள்ளார்.
அத்துடன் சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர்களின் சப்பாத்துக்கள், தொப்பி என்பவற்றின் எடையை குறைத்து இலகு எடையில் சப்பாத்து மற்றும் தொப்பிகளை வழங்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு மேலும் உத்தரவிட்டுள்ளார்.
(rizmira)