எதிர்காலத்தில் பாடப்புத்தகங்களுக்கும் வவுச்சர் முறைமை ஒன்றை அமுலாக்க ஆராய்ந்துவருவதாக அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாடப்புத்தகங்களை அச்சிடுகையில் பல்வேறு சிக்கல்கள் தோன்றுவதுடன் குறிப்பாக இதனால் அதிக செலவுகள் ஏற்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
எனவே அதற்கு மாற்றீடாக வவுச்சர் முறைமை ஒன்றை அமுலாக்குவது குறித்து எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்