பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தவாரம், இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஜேர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கே அவர் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
9 நாட்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்நாடுகளில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. பிரதமருடன், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமும், ஜேர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
(rizmira)