சூரிய சக்தி மின்­சா­ ரத்­தை மன்­னா­ரில் தயா­ரிப்­ப­தற்கு அமைச்­சர் ரிஷாத் எதிர்ப்பு..

மின்­சா­ரத் தேவைக்­காக மன்­னா­ரில் 100MW சூரிய சக்தி மின்­சா­ ரத்­தைத் தயா­ரிப்­ப­தற்கு மின்­சக்தி அமைச்சு எடுத்­துள்ள நட­வ­டிக்­கைக்கு அமைச்­ச­ர­வை­யில் அமைச்­சர் ரிஷாத் பதி­யு­தீன் தனது கடும் எதிர்ப்­பைத் தெரி­வித்­துள்­ளார்.

குறித்த இந்­தத் திட்­டத்­தால் மன்­னா­ரில் சுற்­றா­ட­லுக்­கு பெரும் பாதிப்பு ஏற்­ப­டு­மெ­ன­வும் இந்­தத் திட்­டத்­துக்குச் சம­யத் தலை­வர்­க­ளும் பொது­மக்­க­ளும் ஆட்­சே­பம் தெரி­வித்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மின்­சக்தி அமைச்­சர் ரஞ்­சித் சியம்­ப­லா­பிட்­டிய வருகை தரா­த­தால் பதில் அமைச்­சர் அஜித் பீ.பெரேரா இத்திட்­டத்­திற்­கான பிரே­ர­ணையை அமைச்­ச­ர­வை­யில் சமர்ப்­பித்­த நிலையிலேயே அமைச்சர் ரிஷாத் தனது கடும் ஆட்­சே­பத்­தைத் தெரி­வித்து குறித்த இந்­தத் திட்­டம் உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தக் கூடா­தெ­ன­வும் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

 

(rizmira)