சர்ச்சைக்குரிய பிணை முறி விசாரணைகள் அடுத்த வாரமளவு நிறைவுக்கு..

மத்­திய வங்­கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநி­யோ­கத்தின் போது இடம்பெற்­ற­தாக கூறப்­படும் மோச­டிகள் தொடர்பில் ஆராய நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்குழு, எதிர்­வரும் 13 ஆம் திக­தி­யுடன் சாட்சிப் பதி­வு­களை நிறைவு செய்ய எதிர்­பார்ப்­ப­தாக குறித்த விசா­ரணை ஆணைக்குழு­வுக்கு தலைமை தாங்கும் நீதி­ய­ரசர் கே.டி. சித்­ர­சிறி தெரிவித்துள்ளார்.

குறித்த ஆணைக்குழு முன்­னி­லையில் முக்­கி­ய­மான பல சாட்­சி­யங்கள் உள்ளிட்ட பல சாட்­சி­யங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்ள நிலையில், சாட்சிப் பதிவுகள் இறுதிக் கட்­டத்தை அடைந்­துள்­ளன.

இந் நிலையில் தற்­போது முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜுன மகேந்திரனிடம் ஆணைக்குழு விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இந் நிலை­யி­லேயே அடுத்து வரும் ஒரு வாரத்­துக்குள் சாட்சிப் பதி­வு­களை நிறைவு செய்ய எதிர்­பார்ப்­ப­தாக ஆணைக்குழுவின் தலைவர் நீதி­யரசர் சித்­ர­சிறி தெரிவித்துள்ளார்.

சாட்சிப் பதி­வுகள் நிறை­வுற்ற பின்னர், ஜனா­தி­ப­திக்கு சமர்ப்­பிக்க வேண்­டிய அறிக்கை தயார் செய்யும் பணிகள் ஆரம்­பிக்கப்படும் எனவும் அதற்கான கால அவ­காசம் தமக்கு தேவைப்படும் எனவும் இதன்போது அவர் மேலும் சுட்டிக்கடியுள்ளார்.

உயர் நீதி­மன்ற நீதி­யரசர் கே.டி.சித்­ர­சி­றியின் தலை­மையில் நீதி­ய­ரசர் பிர­சன்ன ஜய­வர்­தன மற்றும் ஓய்­வு­பெற்ற பிரதி கணக்­காய்­வாளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் குறித்த இந்த விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)