எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான முதற்கட்ட பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, புதிய தேர்தல் முறைமை தொடர்பில் அரசியல் கட்சிகளை தெளிவுபடுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் பணிகள் குறித்து இம்மாதம் 20 ஆம் திகதியின் பின்னர் அரசாங்க பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
(rizmira)