ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணைக்கு முகம்கொடுக்க பாராளுமன்ற உறுப்பினர்நாமல் ராஜபக்ஷ பொலிஸில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.
…………… …………………. Update (09-10-2017 10:00)
ஹம்பாந்தோட்டை சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று(09) ஹம்பாந்தோட்டை காவல்துறையில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் டீ.வி.சானகவையும் நாளைய(10) தினமே ஹம்பாந்தோட்டை காவல்துறையில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று அங்கு முன்னிலையாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
(rizmira)