முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, குத்தகைக்குப் பெற்ற சொகுசு வீட்டின் உரிமையாளரான அனிகா விஜேசூரிய, நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக, தெரியவந்துள்ளது.
ரவி கருணாநாயக்க தங்கியிருந்த வீட்டிற்கான குத்தகைப் பணத்தை அர்ஜூன் அலோசியஸ் வழங்கியதாக, அனிகா விஜேசூரிய சாட்சியமளித்திருந்தார்.
இந்நிலையில், மரண அச்சுறுத்தல் காரணமாக அவர் நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக பிணை முறிகள் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழு தகவல்கள் தெரிவித்துள்ளது.