எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது முக்கியமானது. புதிய தேர்தல் முறைமையின் கீழ் கிராமங்கள் ரீதியாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
அத்துடன் இலங்கையில் முதன் முறையாக பெண்களின் பிரதிநித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(rizmira)