பாணந்துறை இலிருந்து வேயங்கொட வரையிலான மின்சார புகையிரத சேவைக்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த இந்தத் திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முதலாம் கட்டத்தின் கீழ் 600 மில்லியன் டொலர் நிதியை வழங்கவுள்ளது.
முதலாம் கட்டத்தின் கீழ் பாணந்துறையில் இருந்து வெயங்கொட வரை மின்சார ரயில் சேவை அமுல்படுத்தப்படும்.
(rizmira)