பிரேசலில் 245 பேர் பாலத்தில் ஒரே நேரத்தில் ஊஞ்சலாடி சாதனை…

பிரேசில் நாட்டின் ஹோர்டோலண்டியா பகுதியில் உள்ள உயரமான இடத்தில் இருந்து ஊஞ்சலாடும் சாகசப்போட்டி நடைப்பெற்றது.

இப்போட்டியில் 245 பேர் இணைந்து பாலத்தில் ஒரே நேரத்தில் ஊஞ்சல் ஆடி கின்னஸ் சாதனைப் படைத்துள்ளனர்.

பாலத்தில் இருந்து ஒரே நேரத்தில் கீழே குதித்து ஊஞ்சல் ஆடுவது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சாகசப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில்: இது கின்னஸ் சாதனைப்புத்தகத்தில் இடம்பெறுவதற்காக நடத்தப்பட்டதாக கூறியுள்ளனர்.