கோப் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்..

அரச கணக்காய்வு சபை பொது அலுவல்கள் தொடர்பான பாராளுமன்ற குழு (கோப்) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான பேச்சுவார்த்தை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று(25) இடம்பெற்றது.

குறித்த இந்த பேச்சுவார்த்தையில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர , நிதி இராஜாங்க அமைச்ச் இரான் விக்கிரமரத்ன , கோப் குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண, பொது அலுவல்கள் தொடர்பிலான பாராளுமன்ற குழுவின் தலைவர் சுனில் ஹந்துநெத்தி , பாராளுமன்ற செயலாளர் நாயகம் , நிதி அமைச்சின் செயலாளர் , கணக்காய்வாளர் நாயகம், சட்டமா அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு உரையாற்றிய சபாநாயகர் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு வலுப்பெற்றிருப்பதுடன் தற்பொழுது இக்குழு சிறப்பாக செயற்பட்டு வருகின்றமை எட்டாவது பாராளுமன்றத்திற்கு கிடைத்த வெற்றியாகும் எனவும் தெரிவித்திருந்தார்.

 

(rizmira)