அரச கணக்காய்வு சபை பொது அலுவல்கள் தொடர்பான பாராளுமன்ற குழு (கோப்) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான பேச்சுவார்த்தை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று(25) இடம்பெற்றது.
குறித்த இந்த பேச்சுவார்த்தையில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர , நிதி இராஜாங்க அமைச்ச் இரான் விக்கிரமரத்ன , கோப் குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண, பொது அலுவல்கள் தொடர்பிலான பாராளுமன்ற குழுவின் தலைவர் சுனில் ஹந்துநெத்தி , பாராளுமன்ற செயலாளர் நாயகம் , நிதி அமைச்சின் செயலாளர் , கணக்காய்வாளர் நாயகம், சட்டமா அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய சபாநாயகர் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு வலுப்பெற்றிருப்பதுடன் தற்பொழுது இக்குழு சிறப்பாக செயற்பட்டு வருகின்றமை எட்டாவது பாராளுமன்றத்திற்கு கிடைத்த வெற்றியாகும் எனவும் தெரிவித்திருந்தார்.
(rizmira)