அரசியல்வாதிகள் ஒவ்வொரு வரும் மேடைகளில் கூறும் விதத்தில் தேர்தலை ஜனவரியில் நடாத்த முடியாது எனவும் தேர்தலை நடாத்துவதற்கு என கால எல்லை காணப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.
மேலும், அரசு விரைவாக உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வர்த்தமானியில் வெளியிடுவதை வைத்தே தேர்தலுக்குரிய காலம் தீர்மானிக்கப்படுகின்றது எனவும் அவர் நேற்று (26) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
(rizmira)