நாட்டில் இன்றும் பல பகுதிகளில் கடும் மழை…

நாட்டின் அருகில் கீழ் வளிமண்டலத்தில் நிலவும் குழப்பநிலை காரணமாக இன்று(30) பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக, ஊவா மாகாணத்தில் சில இடங்களில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக் கூடும் எனவும், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டர் வரை மழை பெய்யலாம் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பிரதேசங்களில் இடைக்கிக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யம் எனவும், பலத்த காற்று வீசும் போது அப்பகுதிகளின் கடல் கொந்தளிப்பதாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.