அரசியலமைப்பு தொடர்பான விவாதம் நாளை வரை நீடிப்பு…

அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தை நாளை(02) வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த இந்த அறிக்கை தொடர்பான விவாதத்தை, மூன்று நாட்களுக்கு (இன்று வரை) நடத்த, முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாளையும் குறித்த விவாதத்தைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.