பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெறக் காரணம் மந்திர சக்தியே.. – சந்திமால்..

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிப் பெற்றமையானது, மந்திர சக்தியின் துணையுடனேயே என இலங்கை அணி வீரர் தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அரபு இராச்சியத்தில் தமது நண்பர் ஒருவரின் தாயாரான மந்திரவாதி ஒருவரிடம் தாம் ஆசிர்வாதம் பெற்றதாகவும், அதனாலேயே குறித்த இந்த போட்டிகளில் வெற்றி பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வளவு திறைமை இருந்தாலும், இவ்வாறான மந்திர சக்தியின் துணை இன்றி எதனையும் சாதிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சந்திமாலின் மேற்குறித்த இந்த கருத்து தொடர்பில், சமுக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

 

(rizmira)