மத்திய வங்கி பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(02) விசேட அமர்வொன்று இடம்பெறவுள்ளது.
ஆணைக்குழுவின் காலம், ஜனாதிபதியால் நீடிக்கப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த அமர்வு இடம்பெறவுள்ள நிலையில், இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸ் அதிகாரிகள் இன்றைய தினம் வாக்குமூலம் வழங்கவுள்ளனர்.