ஜனாதிபதி – அவுஸ்ரேலிய பிரதமர் சந்திப்பு…

அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடையிலான சந்திப்பு இன்று(02) இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து ஜனாதிபதி தனது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இருதரப்பு வர்த்தகம் நலன்தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் , பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர தொடர்புகளுக்கு 60 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இலங்கை வந்துள்ள அவுஸ்ரேலிய பிரதமர் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னர் ஜனாதிபதியை சந்தித்தார்.

மேலும் , அவுஸ்ரேலிய பிரதமர் இன்று(02) நண்பகல் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.