பெற்றோல் தட்டுப்பாடு – பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அசமந்தமே காரணம்…

அண்மையில் நாட்டில் நிலவிய பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தெரிந்திருந்தும் அதனை முகங் கொடுக்கத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காது பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொடுபோக்குக் காட்டியுள்ளது என ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறித்த குழுவில் அமைச்சர்களான சரத் அமுனுகம, பாட்டளி சம்பிக்க ரணவக்க மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் உள்ளடங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rizmira