இந்தியாவில் புதுடெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு…

இந்தியாவில் புதுடெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றும் கடுமையாக மாசடைந்துள்ளதுடன் காற்றில் நுண்துகள்களின் அளவு வழக்கத்தைவிட பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, சாலைகளில் பனிப்போர்வை போர்த்தியது போன்று பனிப்புகை மூட்டம் காணப்படுவதால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில் சேவை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. சில ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.